நல்லூர் பிரதேசத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
Wednesday, February 20th, 2019
நல்லூர்
பிரதேசத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் சக்கர
நாற்காலி வழங்கிவைக்கப்பட்டது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடம் குறித்த மாற்றுத்திறனாளி தனது தேவைப்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்ததை அடுத்து அவரது பிரச்சினை கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் குறித்த மாற்றுத் திறனாளியின் தேவைப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இன்றையதினம் குறித்த சக்கர நாற்காலி கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|