நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
Friday, August 9th, 2024
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
அத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் ஓகஸ்ட் 31 ஆம் திகதி சப்பரமும் செப்டம்பர் 1 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் செப்டம்பர் 2 ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறவுள்ளன.
இந்த ஆண்டு அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அமைச்சருடன் தடுமாறிய விமானி : மயிரிழையில் தப்பினார் மகிந்த அமரவீர!
எதிர்வரும் திங்களன்று முன்னாள் எம்பிக்களுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவசர சந்திப்பு!
அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோர்களினால் பாடசாலை நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டம்...
|
|
|


