நல்லூரில் சிறப்புற நடைபெற்ற சூரன் போர்!

Wednesday, October 25th, 2017

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சூரன் போர் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சூரசம்ஹார நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் இன்றைய தினம்(25) கலந்து கொண்டனர்.

கந்தசஷ்டி விரதம் கடந்த 20ஆம் திகதி ஆரம்பமாகியதுடன் நாளையதினம் காலை (26) நிறைவு பெறவுள்ளது.

கந்தசஷ்டி விரதத்தின் இறுதி தினமான இன்று(25) திருமுருகப் பெருமான் சூரசம்காரம் மேற்கொள்ளும் நிகழ்வு அனைத்து இந்து ஆலயங்களிலும் வெகு விமரிசையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts: