நல்லிணக்க முயற்சியாக இந்திய மீனவர்கள் ஐவர் விடுதலை!
Thursday, November 3rd, 2016இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மீன்பிடித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களில் 5 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில் இன்று 4 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில் ஒரு நல்லிணக்க செயற்பாடாகவே குறித்த விடுதலை இடம்பெற்றுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் சிறந்த அரச நிறுவனமாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவு!
ஜப்பான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகை!
இந்தியாவிலிருந்து நாடு திரும்புவோருக்கு வீடுகள் -மேலதிக மாவட்டச் செயலர்!
|
|