நம்பிக்கையில்லாத் தீர்மானம் தேவையற்றது – அமைச்சர் மஹிந்த அமரவீர!
 Monday, August 7th, 2017
        
                    Monday, August 7th, 2017
            
மத்திய வங்கியின் திறைசேரி பிணைமுறி விவகார சர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரத் தேவையில்லை என்று நம்புவதாக மீன்பிடி மற்றும் நீர்வள மூல அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பாக எடுக்கப்படவேண்டிய தீர்மானம் தொடர்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளதாகத் தனக்குத் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“திறைசேரி பிணைமுறி விவகாரம் தொடர்பாக, முதலாவதாக முறைப்பாடு செய்தவன் நானே. இது தொடர்பாக, இன்று பலரும் உரிமை கோருகின்றனர். ஆனால், என்னாலேயே முதலாவதாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது என்பதை நான் கூறவேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
கொவிட் நோயாளர்களை குணப்படுத்த இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் 100 ஒக்சிஜன் கருவிகள் பிரதமரிடம் கையளிப...
விசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது!
நிதி அமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்க வாய்ப்பு - மத்திய...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        