இலங்கையின் புதிய நிதித் திட்டம் தொடர்பில் நாணய நிதியத்தின் அறிவிப்பு!

Saturday, February 29th, 2020

இலங்கைக்கான புதிய நிதித் திட்டத்தை ஆராயவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நிதித் திட்டம் ஆராயப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் தொடர் பாடல் திணைக்கள அதிகாரி ஜெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில் நேற்று இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கையுடனான புதிய நிதித் திட்டம் எவ்வாறு அமையும் என கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்

Related posts:

தொழில் வாய்ப்புகளை வழங்க அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டுள்ளது - ஜனாதிபதி ஊடகப்பிரிவு!
மழையுடனான வானிலை இன்றுடன் குறைவடைந்தாலும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யும் - ...
இலங்கையின் தலைமைத்துவம் தொடர்பில் அரசியலமைப்பிற்கு உட்பட்டு தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்ப்பதாக இ...