நடைமுறைக்கு வருகின்றது போக்குவரத்து அபராதத் தொகை அதிகரிப்பு !
Sunday, July 15th, 2018
வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறும் 33 குற்றங்களுக்கு அறவிடப்படும் இருப்பிட அபராத தொகையை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முதல் மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய அபராத தொகையானது, 30-50 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
புதிய அபராதத் கட்டண விபரம் –
அதிக வேகத்தில் செல்லல் – ரூபா.3000
போக்குவரத்து விதிகளை மீறல் – ரூபா. 2000
பொலிஸ் கட்டளைகளை புறக்கணித்து பயணித்தல் – ரூபா. 2000
பாதையில் இடையூறாக பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை நிறுத்துதல் – ரூபா.2000
ஆலோசனை உரிமம் பத்திரம் இல்லாமல் ஆலோசகராக ஈடுபடல்– ரூபா. 2000
வருவாய் உரிமங்களைக் காண்பிக்காததற்கு – ரூபா. 1000
வாகனத்தில் அதக ஒலி எழுப்புதல் – ரூபா.1000
வாகனத்தினை பாதையில் நிறுத்துதல் – ரூபா.1000
பாதுகாப்பு தலைக்கவசம் அணியாதவிடத்து – ரூபா.1000
வாகனப் பட்டி (பெல்ட்) இடாமை – ரூபா. 1000
பொருத்தமற்ற ஒலிகளை எழுப்புதல் – ரூபா.1000
Related posts:
|
|
|


