நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர உத்தரவு!

Monday, March 19th, 2018

மீன்பிடி வலைகளை கடற்தொழிலாளர்களுக்கு விற்ற தனியார் நிறுவனம் ஒன்றின் நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடற்தொழிலாளர்களிடம் இருந்து பெற்ற நிதியை மீள அவர்களுக்கு வழங்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த நிறுவனத்திடம் இருந்து மீன்பிடி வலைகளை வாங்கிய கடற்தொழிலாளர்களின் பிரதிநிதிகள் அமைச்சரை சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது மீன்பிடி வலைகள் தரக்குறை முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியதனை அடுத்தே அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

Related posts: