நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுங்கள் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்து!

கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்
அத்துடன் இத்திட்டத்தின் எஞ்சிய பணிகளுக்காக இவ்வருடம் ஒதுக்கப்பட்ட தொகை 457 மில்லியன் ரூபாயாகும். இத்திட்டத்தின் 99% பணிகள் இதுவரை முடிவடைந்துள்ளன.
கொழும்பை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குவது, சுற்றுலாவை மேம்படுத்துவது மற்றும் உள்கட்டமைப்பை மீட்டெடுப்பதும் பராமரிப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
விமான நிலைய நவீனமயப்படுத்தும் பணிகள் ஆரம்பம்!
பசும்பால் தேவையை பூர்த்தி செய்வதற்கு நீண்டகால திட்டமொன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் உயிரிழப்பு - சுகாதார திணைக்களம் தெரிவிப்பு!.
|
|