தொழில்வாய்ப்பினை மையப்படுத்தி வேலைதிட்டம்!
Tuesday, January 21st, 2020குறைந்த கல்விதகைமையுடைய மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வேலைதிட்டத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பல்துறை அபிவிருத்தி செயல்திறன் திணைக்கனம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குரிய விண்ணப்பங்கள் பிரதேச செயலாளர் காரியாலயங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அநத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட தொழிலின் அடிப்படையில் 6 மாதங்கள் தொழில் பயிற்சி வழங்கப்படும் என்பதோடு குறித்த காலப்பகுதிகள்குள் 22,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!
ஆடைகளை வழங்க தயார் - தேசிய ஆடைத் திணைக்களம்!
ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
|
|