இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் – பொதுமக்களுக்கு வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் எச்சரிக்கை!
Sunday, September 6th, 2020இலங்கை சமூகத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என்ற போதிலும் அதன் ஆபத்து நீங்கவில்லை என வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
இதனால் உரிய முறையில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு ஸ்தாபனத்தின் விசேட வைத்தியர் ஜுட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமூகத்திற்குள் பரவலாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நேற்றையதினம் 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 867 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணம் - அமைச்சரவை அங்க...
புதிய பிரதமரின் கீழ் அனைத்து கட்சியினருடனான இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி இணக்கம் !
காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு நோய் அறிகுறி ஏற்பட்டால் குருதிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் - வடமாகாண ச...
|
|