தொடர் மழை – சிறுவர்களுக்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை!
Sunday, December 17th, 2023தொடர் மழையினால் சிறுவர்களுக்கு ஹெபடைடிஸ் (வைரஸ்) பாதிப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுடன் ஹெபடைடிஸ் நோய் குழந்தைகளையும் பாதிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
முறையான வைத்திய சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதன் மூலம் குழந்தைகளை இந்நிலையிலிருந்து பாதுகாக்க முடியும் என டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மீண்டும் ரயில்வே ஊழியர்கள் அனைவரும் பணிப்புறக்கணிப்பில்!
வீட்டுத்திட்ட தெரிவில் திருப்தியில்லை:தகுதியானவர்கள் உள்வாங்கப்பட வேண்டும் - சாவகச்சேரி பிரதேச சபையி...
3 நாட்களில் வீட்டை வந்தடையும் கடவுச்சீட்டு - 50 பிரதேச செயலக அலுவலகங்களில் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்...
|
|