தொடர்மாடி வீடுகளுக்கு தபால் பெட்டிகள் அவசியம்!
Friday, March 24th, 2017
தொடர்மாடி வீடுகளை நிர்மாணிக்கும் போது, கீழ் மாடியில் தபால் பெட்டிகளை கட்டாயமாக அமைக்க வேண்டும் என்ற யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
தொடர்மாடி வீடுகளில் காணப்படும் தபால் சேவை குறைப்பாட்டை நிவர்த்திக்கும் நோக்கிலேயே தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீமினால் குறித்த இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
வீட்டின் இலக்கங்களின் அடிப்படையில் தபால் பெட்டிகளைக் கொண்ட பிரதேசமொன்றை கீழ் மாடியில் ஸ்தாபிப்பதற்கும், குறித்த பெட்டிகளின் திறப்புகளை குறித்த வீட்டு உரிமையாளர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
Related posts:
இம்மாத இறுதிக்குள் முன்பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை!
இக்கட்டான நேரத்தில் இந்தியா, இலங்கையுடன் நிற்க வேண்டியதன் அவசியத்திற்கு இந்திய நாடாளுமன்ற ஆலோசனைக் க...
பொன்னாலையில் கொலைக்கு பயன்படுத்திய கார் அராலியில் மீட்பு !
|
|
|


