தேவையான அளவு அரிசி கையிருப்பில் – அரிசி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம் – விவசாய அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, August 2nd, 2022

தேவையான அளவு அரிசி நாட்டில் உள்ளமையினால் அரிசி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய விதை இறக்குமதியாளர்கள் சங்கத்தினருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

எதிர்பார்த்தமையை விடவும் அதிக நெல் அறுவடை கிடைக்கிறது. இந்த போகம் நிறைவடையும் போது வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு ஆலோசனை வழங்க முடியும். எதிர்காலத்தில் ஏற்படும் தேவைக்கு அமைய மாத்திரம் அரிசியை இறக்குமதி செய்ய முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

மாகாணசபை ஆட்சியின் பின்னரே வடக்கின் கல்வி வீழ்ச்சி: இறுதி நிலையில் கிளிநொச்சி மாவட்டம் மாவட்டம் - ...
ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி - பரீட்சைத் திணைக்களம் தெரிவிப்பு!
இலங்கையர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பு - இலங்கைக்கான கட்டார் தூதுவர்...