தேர்தல் கண்காணிப்பில் பவ்ரல் சார்பில் 7,000 பேர்!

Tuesday, January 16th, 2018

ஏதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 7 ஆயிரம் பேர் ஈடுபடவுள்ளனர் என பவ்ரல் அமைப்புத் தெரிவித்துள்ளது.

வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் நாடளாவிய ரீதியில் இவர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது

அத்துடன் எதிர்வரும் 22, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தபால் மூல வாக்குப் பதிவுத் தினத்தன்று ஆயிரம் பேர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர் என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts: