தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை!

Monday, December 9th, 2019

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒன்று நாளை (10) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு கூடும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் ஆணைக்குழுவின் மேலும் சல உறுப்பினர்களும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது

Related posts:

அவசரமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டியவர்களை கொண்டு செல்வதற்கு பொலிஸாரின் அனுமதி அவசியமில்லை...
இந்தியா நிதியுதவி - நவம்பர்முதல் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை - அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இன்று சம...
யார் ஆட்சிக்கு வந்தாலும் 2048 ஆம் ஆண்டு வரை கடனை செலுத்துவது தொடர்பான நெருக்கடியில் இருந்து இலங்கை ம...