தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!
Wednesday, July 17th, 2024
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான நிதி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதில் அரச அச்சகத் திணைக்களம் மற்றும் காவல்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகையும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகளை முன்னெடுக்குமாறு அதனுடன் தொடர்புடைய சகல நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
சட்ட விரோத பண பரிமாற்றத்தை தடுத்தல் தொடர்பில் அரசு பொறுப்புடன் செயற்படுகிறது!
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை...
மேலும் 182,140 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளனர் - நிதி இராஜாங்க அமைச...
|
|
|


