தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

Tuesday, May 7th, 2019

தேர்தலுக்கு முன்னர் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புபட்ட பலர் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், அவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளில் பாதுகாப்புத் தரப்பினர் தற்பொழுது ஈடுபட்டிருப்பதாகவும் ரொய்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு வெடிகுண்டுத் தாக்குதல்களின் பின்னரான நிலைமைகள் குறித்தும், நாட்டின் பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்தும் இந்த செவ்வியில் ஜனாதிபதி கருத்துக்களைப் பரிமாறியிருந்தார்.

“தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது, எனவே தேர்தல்களுக்கு முன்னர் நான் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவேன். அத்துடன் பயங்கரவாதத்தையும் நான் முற்றாக ஒழிப்பேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: