தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு!

Saturday, February 23rd, 2019

கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 23.6 மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .

கடந்த வருடத்தின் முதல் மாதத்துடன் ஒப்பிடு கையில், இது 2.7 மெற்றிக் தொன் அதிகரிப்பாகும் என்று Forbes & Walker தரகு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பழ உற்பத்தியை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளை இலக்காகக் கொண்டு பழங்கள் உற்பத்தி செய்யப்படவிருக்கின்றன என தெரிவிக்கப்படுகிறது.

Related posts: