அதிகரிக்கும் வீதி விபத்து மரணங்கள் : பொலிஸ் ஊடகப் பிரிவு!

Monday, April 9th, 2018

நடப்பு  ஆண்டின், இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 3 ஆயிரத்து 368 வாகன விபத்துகள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வீதி விபத்துக்களின் மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு 267 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், 322 பேர் உயிரிழந்தாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts: