தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு விஷேட அறிவித்தல்!

Tuesday, June 6th, 2017

டெங்கு நோயாளர்களுக்காக வழங்கப்படும் டெக்ஸ்ட்ரன் 40 மருந்தை மருத்துவர்கள் நிராகரித்துள்ளதாக சில பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தி பொய்யானது என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு ஒழிப்பு பிரிவு கூறும் வகையில் அந்த மருந்தின் தரம் தொடர்பில் எந்வொரு பிரச்சினையும் இல்லை என சுகாதார அமைச்சும் குறிப்பிட்டுள்ளது.தற்போது டெங்கு நேயாளர்கள் மற்றும் டெங்கு குருதிப் பெருக்கு நோயாளர்களுக்கு தேவையான டெக்ஸ்ட்ரன் 40 மருந்து தாய்லாந்தில் இருந்து மாத்திரமே இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த மருந்தை தவிர வேறு எந்தவொரு நாட்டிலும் உற்பத்தி செய்யப்படும் டெக்ஸ்ட்ரன 40 மருந்து, இலங்கையில் உள்ள மருந்துவமனைகளில் பயன்படுத்தப்படுவதில்லை என அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது

Related posts: