தேசிய சம்பளம் மற்றும் பதவியணி ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்!

Saturday, March 30th, 2019

தேசிய சம்பளம், பதவியணி ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி புதிய தலைவராக முன்னாள் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான எஸ்.ரனுக்கே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் செயலாளராக முன்னாள் அமைச்சரவை செயலாளர் அநுர ஜயவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய உறுப்பினர்களாக சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகளான சீ.பி.சிறிவர்தன, கலாநிதி தமிதா டி சொய்சா, லலித் கன்னங்கர, ஜானக்க சுகததாச, சித்ராங்கனி வாகீஸ்வர, சந்ராணி சேனாரத்ன, கிங்ஸ்லி பெர்ணான்டோ, ஜீ.எஸ்.எதிரிசிங்க, எம்.சி.விக்ரமசேகர, வைத்தியர் பாலித அபேகோன், டி.அபேசூரிய, லெஸ்லி தேவேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

Related posts: