தேசிய உற்பத்தித் திறன் அபிவிருத்தியில் கிளிநொச்சி முதலாம் இடம்!

Friday, January 4th, 2019

2018 ஆம் ஆண்டில் தேசிய உற்பத்தித் திறன் அபிவிருத்தியில் கிளிநொச்சி மாவட்டம் முதலாம் இடம் பெற்றுள்ளதாகப் பொது நிர்வாக இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

பொது நிர்வாக இடர் முகாமைத்துவ அமைச்சின் கீழ் உள்ள தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அரச திணைக்களங்களிடையே கடந்த ஆண்டு இடம்பெற்ற போட்டியிலேயே கிளிநொச்சி மாவட்டம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இதற்கான விருது கடந்த நவம்பர் மாதம் வழங்க ஏற்பாடாகியிருந்தபோதும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாகப் பிற்போடப்பட்டிருந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நீரை சுத்திகரிப்பதற்கான இரசாயன பொருட்களுக்கு தட்டுப்பாடில்லை - சமூக ஊடக செய்திகளுக்கு சபை மறுப்பு!
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்தும் சீனா ஆதரவளிக்கும் - ஜனாதிபதியிடம் சீனா வெளிவிவகார பிரதி ...
4.5 பில்லியன் டொலர் வரையிலான முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயார் – இரா...