சுகாதார அமைச்சர் கெஹலியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு!

Tuesday, July 18th, 2023

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போதே எதிர்கட்சித் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் தமது பதவிகளை விட்டு விலக வேண்டும் என தெரிவித்து இன்று (18) காலை அமைச்சுக்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

அத்துடன், நேற்று பிற்பகல் கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், ஒரு சிலரின் எதிர்ப்பினால் தாம் பதவியை இராஜினாமா செய்யத் தயாரில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

புதிய சேவைப் பிரமாணக் குறிப்பினால் பாதிக்கப்பட்ட அதிபர்களுக்கு பதவியுயர்வு கல்வி அமைச்சு அறிவிப்பு!
நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தனியார் போக்குவரத்து சேவைகளை வழங்க வேண்டும் – வைத்தியர்கள்...
சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் - துற...