தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை – நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு!
 Saturday, September 26th, 2020
        
                    Saturday, September 26th, 2020
            
தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.
அதற்கு அமைய 13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்க்கும், 12 – 13 அங்குலம் வரையான தேங்காய் 65 ரூபாய்க்கும், 12 அங்குலத்திற்கு குறைவான தேங்காய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மை காலங்களில் இலங்கை சந்தைகளில் தேங்காய் ஒன்றின் விலை 90 முதல் 100 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து நாடாளுமன்றிலும் அண்மையில் பேசப்பட்டது. இந்நிலையிலேயே, தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை 
வரவு செலவுத் திட்டம் நவம்பரில் சமர்ப்பிப்பு!
வருடம் முழுவதும் தடையின்றி எரிபொருளை வழங்க தேவைப்படும் பெருந்தொகை டொலரை பெறுவது தொடர்பில் விசேட ஆலோச...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        