தெற்காசிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சர்!

Thursday, November 1st, 2018

புதிய வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம தெற்காசிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் நேற்று சந்திப்பை நடத்தியுள்ளார்.

இதில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், நேபாளம், இந்தியா, மாலைத்தீவு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போது நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமைகள் தொடர்பில் இதன்போது அமைச்சரினால் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அதேநேரம் கடந்த தினம் இலங்கைக்கான வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை ஜனாதிபதி சந்தித்து, தற்போதைய நாட்டு நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று ஆரம்பம் - வழிமுறைகள் தொடர்பில் துணைவேந்தர்களுக்கு அறிவித்தப்பட்டுள்...
“சிமாட் போல்” ஒப்பந்தத்தில் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் பாரிய மோசடி – ஆணையாளரின் அனுதியின்றி பெர...
வசந்த முதலிகே உள்ளிட்ட 5 பேருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாட சந்தர்ப்பம்!