துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு – தேசிய கட்டட ஆய்வு நிறுவகம்!
Thursday, November 14th, 2019கொழும்பு நகர் காற்றில் தூசுப் படிமங்களின் செறிவு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரின் தூசு துகள்களின் செறிவுச்சுட்டி தற்போது 107ஆக பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலைமை இன்று மேலும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதனால் சுவாச நோயாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
ஆசியாவில் இலங்கையே கல்வியில் முதலிடம் பெற்றுள்ளது.!
முகாமில் வாழ்பவர்களுக்கு காணிகள் வழங்கப்படும் – யாழ் அரச அதிபர் வேதநாயகன்
சட்டம் ஒழுங்கை பொறுமையுடன் நிர்வகிக்க உதவுங்கள் - பொதுமக்களிடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை!
|
|