திருமலை எண்ணெய் தாங்கியை அபிவிருத்தி செய்ய முயற்சி!
Friday, October 6th, 2017
திருகோணமலை எண்ணெய் தாங்கி திட்டத்தினை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வீதி, பெற்ரோலிய துறை மற்றும் திருகோணமலை துறைமுக மற்றும் மின்சக்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், இந்தியாவும் இலங்கையும் இணைந்து தொழிற்படும் குழு ஸ்தாபிக்கப்பட்டது.
தற்போது இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையே இந்த குழுவின் ஊடாக திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய் தாங்கிகளில் 15 தாங்கிகள் தற்போது எல்.ஐ.ஓ.சீ நிறுவனத்தினால் உபயோகிக்கப்படுகிறது. ஏனைய தாங்கிகள் குறித்தே இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே தற்போதைய பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மத்திய வங்கியின் நாணயத்தாள் குறித்த அறிவிப்பு!
புதிய பேருந்து முன்னுரிமை பாதை திட்ட பணியில் பெண்கள் பொலிஸார் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்!
இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து புறப்பட்டுச் சென்றார் சீன பாதுகாப்பு அமைச்சர்!
|
|
|


