புதிய பேருந்து முன்னுரிமை பாதை திட்ட பணியில் பெண்கள் பொலிஸார் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்!
Wednesday, September 16th, 2020அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பேருந்து முன்னுரிமை பாதை திட்ட அறிவுறுத்தல்களை வீதிகளில் காட்சிப்படுத்தியபடி நிற்கும் பெண் பொலிசார் அந்த பணியில் இனி ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிற்கு புதிய வீதி ஒழுங்கு பரிச்சயமாவதற்காக பெண்பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
எனினும், பெண் பொலிசாரை மட்டும் அந்த பணியில் ஈடுபடுத்தியமை சமூக ஊடகங்களில் சர்ச்சையாகியதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய வீதி ஒழுங்கின்படி பேருந்து முன்னுரிமை பாதையில் பயணிக்கும்படி முச்சக்கர வண்டி, மற்றும் மோட்டார்சைக்கிள் ஓட்டுனர்களிற்கு பொலிசார் அறிவுறுதியுள்ளனர்.
மேலும் இந்த வீதி ஒழுங்கை மீறுபவர்களிற்கு 2,000 ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திங்களன்று வைத்தியர்கள் முழுநேர பணிப்புறக்கணிப்பு – GMOA
அரச உத்தியோகத்தர்களை மீள இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை திங்களன்று வெளியாகும்!
எரிபொருள் விலை அதிகரித்த போதும் முச்சக்கர வண்டி கட்டணங்களை மாற்றம் ஏற்படாது - அகில இலங்கை முச்சக்கரவ...
|
|