புதிய பேருந்து முன்னுரிமை பாதை திட்ட பணியில் பெண்கள் பொலிஸார் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்!
Wednesday, September 16th, 2020
அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பேருந்து முன்னுரிமை பாதை திட்ட அறிவுறுத்தல்களை வீதிகளில் காட்சிப்படுத்தியபடி நிற்கும் பெண் பொலிசார் அந்த பணியில் இனி ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிற்கு புதிய வீதி ஒழுங்கு பரிச்சயமாவதற்காக பெண்பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
எனினும், பெண் பொலிசாரை மட்டும் அந்த பணியில் ஈடுபடுத்தியமை சமூக ஊடகங்களில் சர்ச்சையாகியதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய வீதி ஒழுங்கின்படி பேருந்து முன்னுரிமை பாதையில் பயணிக்கும்படி முச்சக்கர வண்டி, மற்றும் மோட்டார்சைக்கிள் ஓட்டுனர்களிற்கு பொலிசார் அறிவுறுதியுள்ளனர்.
மேலும் இந்த வீதி ஒழுங்கை மீறுபவர்களிற்கு 2,000 ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு – கிழக்கு இளையோரை பொலிஸில் இணைய அழைப்பு - மூத்த பொலிஸ் அத்தியகட்சர் அரசரெட்ணம்!
நாடாளுமன்றம் தவிர்ந்த வேறு யாருடைய பரிந்துரையையும் ஏற்கப் போவதில்லை - கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜன...
றீமால் புயலின் - இலங்கையில் மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்!
|
|
|


