திட்டமிட்டபடி பரீட்சைகள் நடைபெறும் – கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி. பெரேரா அறிவிப்பு!
Wednesday, January 12th, 2022இந்த வருடத்தில் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்களில் மாற்றமெதும் இல்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசி ரியர் கபில சி. பெரேரா தெரிவித்துள்ளார்
முன்பதாக உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2021 ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்தது. இருப்பினும் இவை கொரோனா தொற்று நிலையில் பாதிப்பை கருத்திற்கொண்டு இரண்டு முறை பின்போடப்பட்டன.
முன்பு திட்டமிட்ட வகையில் புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22 ஆம் திகதியும், உயர்தர பரீட்சையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதிமுதல் ஆரம்பிப்பதற்கும் எதிர்பார்ப்பதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி. பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
3A சித்திகளை பெற்றும் பல்கலைகழகம் செல்ல முடியாத நிலையில் மாணவி!
மற்றுமொரு நிவாரணப் பட்டியல் அடுத்த வாரம் பகிரங்கப்படுத்தப்படும் - இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் அற...
இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டம்? - இந்திய ஊடகங்கள் தகவல்!
|
|