திடீர் சுகயீனம்: தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி வைத்தியசாலையில் அனுமதி!!

Tuesday, October 13th, 2020

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி சுகயினம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

87 வயதான அவர், திடீர் சுகயீனம் காரணமாக வெள்ளவத்தை தனியார் வைத்திசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே ஆனந்தசங்கரி வழமையான வைத்திய சிகிச்சைகளுக்காகவே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அவரது உடல்சிலையில் பாதிப்புகள் இல்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: