தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு மூன்று மில்லியன் ரூபா நட்ட ஈடு!

Saturday, June 16th, 2018

கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் தாமரைக் கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சியை சேர்ந்த இளைஞருக்கு மூன்று மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமரைக் கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி, அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் எனும் உயர்தர மாணவன் கடந்த எட்டாம் திகதி தாமரைக் கோபுரத்தின் 16 வது மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்தார்.
இந்தக் கோபுரத்தில் மின் தூக்கி பொருத்துவதற்காக விடப்பட்டிருந்த பகுதிக்குள் சென்ற நிலையிலேயே கீழே வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தாமரைக் கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட சீனா மற்றும் இலங்கையைச் சேர்ந்த இரண்டு ஒப்பந்த நிறுவனங்கள் உயிரிழந்த இளைஞனுக்கு காப்புறுதி பணம் மற்றும் நிறுவன பங்களிப்பு என்பனவாக மூன்று மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளனர்.
குறித்த பணம் உயிரிழந்த நிதர்சனின் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரன் ஆகியோரின் பெயரில் நிலையான வைப்பில் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related posts: