மதுபோதையில் சாரதித்துவம்: 8635 சாரதிகள் கைது!
Wednesday, August 14th, 2019கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.
அதன்படி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 8635 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Related posts:
சுயதொழில் வாய்ப்புகளூடாகவும் வளமான வாழ்வியலை உருவாக்கிக் கொள்ளமுடியும் - ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்ப...
கழிவுப்பொருட்களை பசளையாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
ஐ.நா சமாதான படையணிகளின் விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கு!
|
|