தற்போதுள்ள கொரோனா சுகாதார வழிகாட்டல்கள் பெப்ரவரி 28 வரை நீடிப்பு – மக்கள் முழுமையான பங்களிப்பை வழங்கினால் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது என சுகாதார தரப்பினர் அறிவுறுத்து!

Monday, January 31st, 2022

தற்போதுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் 2022 பெப்ரவரி 28 ஆம் திகதிவரை சுகாதார அமைச்சகத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் கொரோனா தொற்று உறுதியாளர் எண்ணிக்கை உயர்வடைந்து செல்கின்றது. நேற்றையதினம் அயிரத்து 56 கொரோனா தொற்று உறுதியாளர்கள் பதிவாகியிருந்தது.

இதேவேளைய நாளாந்த தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகாரபூர்வ எண்ணிக்கையை விடவும் வெகுவாக அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், எதிர்காலத்தில் திருத்தங்களுக்கு உட்பட்டு இந்த நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நாட்டில் அதிகரித்து வருகின்ற கொவி காரணமாக எதிர்வரும் காலத்தில் நாட்டை முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும் பட்சத்தில், மாதாந்த சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் நபர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குவார்கள் என பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வாறான நிலைமைக்கு நாட்டை கொண்டு செல்லாதிருப்பதற்கான பொறுப்பு, நாட்டு மக்கள் வசமே காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் மூன்று தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்வது மாத்திரமன்றி, சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில், இவ்வாறான பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: