முடிவுக்கு வந்தது பட்டதாரிகள் போராட்டம்!

Wednesday, July 19th, 2017

அரச வேலைவாய்ப்பு பெற்றுத்தரக்கோரி கடந்த 143 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமது போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டு மாத காலத்திற்குள் தமது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இன்று (19) தமது ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுள்ளனர். அத்துடன் குறித்த இரண்டு மாத காலத்தில் தமக்கு தீர்வு பெற்றுத்தராவிட்டால்இ மீண்டும் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: