தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இரண்டொரு வாரத்தில் வெளியாகும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!
Thursday, August 29th, 2024
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை (2023) பெறுபேறுகள் இன்னும் 02 அல்லது 03 வாரங்களில் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால், இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களை இடமாற்றம் செய்ய வேண்டாமென, பொது நிர்வாக அமைச்சிடம் கோரிய போதிலும் உரிய தீர்வு கிடைக்கவில்லையெனவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான வரி அதிகரிப்பு!
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்!
அரச துறை மாத்திரமன்றி தனியார் துறையும் வலுப்பெற வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
|
|
|


