தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவிளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருநெல்வேலி மேற்கு பகுதி மக்கள் கோரிக்கை!

Friday, June 24th, 2016

தமது பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவித்திட்டங்களை பெற்றுத்தமாறு திருநெல்வேலி மேற்கு காளிகோவிலடி சனசமூக நிலைய நிர்வாகத்தினர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சனசமூக நிலையய முன்றலில் தலைவர் சந்திரசேகரம் சுபேந்திரன் தலைமையில் நடைபெற்ற சந்திப்பின் போது விசேட அதிதியாக கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசனிடம் தமது கோரிக்கைளளை குறித்த சனசமூக நிலைய நிர்வாகத்தினர் முன்வைத்துள்ளனர்.

மேலும் தமது பகுதி மக்கள் மிகவும் வறியவர்களாக உள்ளதால் அவர்களது வாழ்வாதார மேம்பாட்டை செய்வதற்கு கடந்த காலங்களில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி பல உதவிகளை மேற்கொண்டிருந்ததாகவும் தற்போது மேலும் பல மக்கள் தமக்கான வாழ்வாத உதவிகளை எதிர்பார்த்திருப்பதனால் அவர்களுக்கான உதவிகளை பெற்றுத்தருமாறும் கோரியிருந்தனர்.

குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அம்பலம் இரவிந்திரதாசன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுதருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

Related posts: