தொடருந்தும் அஞ்சல் சேவைகள் பாதிப்பு!

Friday, October 4th, 2019


அஞ்சல் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறின் காரணமாக, அஞ்சல் சேவைகள் தொடருந்தும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 28ம் திகதி முதல் அதன் கணினி கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மின்னியல் நிதி கட்டளைகள் மற்றும் ஓய்வூதியம் வழங்கல் போன்ற பொதுமக்களுக்கான சேவைகள் பல பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலைமை தற்போது 80 சதவீதம் சீர்செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: