தனியார் பேருந்து பேருந்துகளுக்கு தனியான வர்ணம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம்!

Tuesday, June 9th, 2020

தனியார் பேருந்துகளுக்கு தனியான ஒரு நிறத்தை அறிமுகப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாளாந்தம் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 மரணங்கள் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவற்றில் அதிகளவானவை தனியார் பேருந்துகளால் ஏற்படுகின்றன. இது தொடர்பில் கடுமையான அவதானம் செலுத்தி விபத்தினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அந்தவகையில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை போன்றே தனியார் மற்றும் பாடசாலை பேருந்துகளுக்கும் தனியான நிறம் இருப்பது அவசியமாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே கொரோனா தடுப்பிற்காக சுகாதார பிரிவு வழங்கிய ஆலோசனைகளை பின்பற்றி ஆசனங்களுக்கு மாத்திரம் பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: