தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிக்க தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு – அமைச்சர் நிமல் சிறிபால எ சில்வா தெரிவிப்பு!

Wednesday, December 23rd, 2020

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக அதிகரிக்க தேவையான சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்த தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் வாரத்தில் உரிமையாளர்கள் மற்றும் தொழிற் சங்க தலைவர்கள் இணைந்து இந்த விடயம் தொடர்பில் முடிவுக்கு வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: