எதிர்வரும் 20ஆம் திகதி கட்சித் தலைவர்கள் – நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் அறிவிப்பு!
Saturday, April 15th, 2023
எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்றையதினம் முற்பகல் 11 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல் கட்சித் தலைவர்கள் கூட்டம் இதுவாகும்.
இதன்படி, இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, புத்தாண்டின் பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
160 மில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட கடன் தொகைக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம்!
மீண்டும் பெற்றோலுக்கு நெருக்கடி: அமைச்சர் அர்ஜுன எச்சரிக்கை!
இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கு முந்நாள் இந்நாள் ஜனாதிபதிகள் விஜயம்!
|
|
|


