இணையத்தளத்தை முடக்கிய மற்றொருவரும் கைது!
Tuesday, August 30th, 2016
ஜனாதிபதியின் இணையத்தளத்தை முடக்கிய குற்றச்சாட்டில் மொரட்டுவையைச் சேர்ந்த 27 வயது மற்றுமொரு நபரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அத்துமீறி நுழைந்தமைக்காக கடுகண்ணாவையைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.president.gov.lk எனும் இணையத்தளத்தை முடக்கி அதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்பில் அவதூறான செய்திகளை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் இணைய குற்றங்கள் பிரிவுக்கு பொறுப்பான ஒரு விசேட குழு இவர்களைக் கைதுசெய்துள்ளது.
Related posts:
யாழ்ப்பாணம் மாநகரப் பகுதிகளில் வீதியில் கழிவுகள் கொட்ட வேண்டாம்!
ஊரடங்கு, தனிமைப்படுத்தல் சட்டங்களை மதிக்காதவர்களுக்கு தண்டப்பணம் விதித்த யாழ்ப்பாண நீதிமன்று!
யாழ். பல்கலையில் இளங்கலை மாணவர் ஆய்வரங்கு ஆரம்பம்!
|
|