தனியாரின் நில ஆக்கிரமிப்பு – யாழ். நகரின் பெரும் பகுதி வெள்ளத்தினால் மூழ்கியது – அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் குற்றச்சாட்டு!

Tuesday, November 9th, 2021

யாழ்ப்பாணக் குடாநாட்டில்  தொடர்ந்து பெய்யும் கன  மழையின் காரணமாக நகரின் பெரும் பகுதி வெள்ளத்தினால் மூழ்கி  காட்சியளிக்கின்றது.

வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக யாழ்ப்பாணம் ஸ்டான்லி விதியானது பொதுமக்கள் போக்குவரத்திற்காக ஒரு வழி வீதியான போலீசாரால் அறிவிக்கப்பட்டு வீதித் தடைகளும் ஏற்படுத்தப்பட்டது..

கடந்த இரு நாட்களாக குடாநாட்டில் அதிக மழை பொழிவதோடு இன்று அதிகாலை முதல் பெரும் மழை பொழிகின்றது. இதனால்  நகரின் மத்தியில் உள்ள 43 குளங்களும் நிரம்பி வழிகின்றது.

இதேநேரப் யாழ் நகரின் மத்தியில் உள்ள ஸ்ரான்லி வீதி, கண்ணாபுரம், சோலைபுரம், கற்குளம், பொம்மைவெளி, நித்திய ஒளி,  மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாநகர சபை பிரதேசங்கள் நீரில் மிதக்கின்றன.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் நகரின் மத்தி நீர் வழிந்தோடும் பிரதான இடங்கள் பல தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையினால் நீர் மிக வேகமாக அதிகரிப்பதனால் மக்கள் பெரும் அவலத்தை எதிர் நோக்குகின்றனர்.

இதேநேரம் யாழ்ப்பாணம் மாநகரில் கழிவு நீர் ஓடும் கால்வாய் வாய்க்கால் சீரமைக்கப்படதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: