கொரோனா அச்சுறுத்தல்: யாழ்ப்பாணத்தில் 2 ஆவது கட்டமும் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்படும் – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

Monday, April 13th, 2020

யாழ்.மாவட்டத்தில் நேற்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 6 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள 4 பேருக்கும், தெல்லிபழை வைத்தியசாலையில் உள்ள ஒருவருக்கும், முல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கும் கொரோன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்.

அத்துடன் யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவடைந்து வருதவாகவும் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக எந்தவொரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கண்டறியப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பலருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறியதுடன் கடந்த ஒரு வாரத்தில் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதே நேரம் கொரோனா சந்தேகத்தில் தற்போதும் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் யாழ். மாவட்டத்தில் இனங்காணப்பட்ட 7 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்த பணிப்பாளர் குறித்த நோயால் தாக்கமுற்றோர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துவருவதாகவும் விரைவில் அவர்கள் வீடு திரும்புவார்கள் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: