தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுங்கள் – பொலிஸார் வேண்டுகோள்!
Tuesday, July 14th, 2020
கொரொனா பரவலின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதா ஸ்தாபனத்தால் அறிவிக்கப்படும் வரை இந்த சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல் அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Related posts:
வேட்பு மனு நாளன்று 1700 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன - பங்காளதேஷ் உயர்ஸ்தானிகரிடையே விசேட சந்திப்பு – தொழில்நுட்பத்தை ...
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுடன் தொடர்புடைய பொலிசார் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை - பொலிஸ் ...
|
|
|


