தனிநபர் மற்றும் கட்சி சார்பின்றி நாட்டை முதன்மைப்படுத்தி அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Monday, July 1st, 2024

தனிநபர் மற்றும் கட்சி சார்பின்றி நாட்டை முதன்மைப்படுத்தி அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்துக் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டிற்காகப் பாரிய பணிகளைச் செய்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த புதிய அரசியல் பயணத்தைப் பாதுகாத்து அதனை முன்னோக்கிக் கொண்டு செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டம் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழிகள் குறித்து மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில (30) மாத்தறை கோட்டை விளையாட்டரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: