தட்டுப்பாடின்றி உரம் வழங்குங்கள் – ஜனாதிபதி உத்தரவு!
Wednesday, March 4th, 2020
சிறு போகத்திற்கு தேவையான உரத்தை தட்டுப்பாடிற்கு இடமளிக்காது விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களிற்குள் ஒரு தொகை உரம் இலங்கைக்கு வரவுள்ளதுடன் அவற்றை தாமதமின்றி விநியோகிக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, விவசாயிகளுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மேல் மாகாணத்திற்கான தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு - ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட 68 பொலிஸ் ...
கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வோம் - ஊடகங்கள் மத்தியில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!
குளவி கொட்டியதில் 25 மாணவர்கள் காயம் - 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் - கிளிநொச்சி மகா வித்தியாலயத்த...
|
|
|


