தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கடும் சட்டம் – மீறினால் 50000 ரூபா அபராதம்!

Friday, July 17th, 2020

பயணிகள் நடைபாதை மற்றும் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது இன்றுமுதல் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை கண்காணிக்க பொலிஸார் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களத்தின் சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.. அத்துடன் இந்த வீதி சட்ட ஒழுங்கினை மீறும் சாரதிகள் மீது 50 000 ரூபா வரை தண்டப்பணம் விதிக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


குடாநாட்டு பெண்களிடம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!
எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்தியுங்கள் - இலங்கை வங்குரோத்து நிலைக்கும் செல்லாது - அமைச்ச...
சரிவு நிலையில் இருந்து மீண்டிருந்தாலும், நாடு எதிர்நோக்கும் சவால்கள் இன்றும் முடிவுக்கு வரவில்லை - ஜ...