தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத ஒருவருக்கு பரிசோதனையில் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தபடுவார் – புதிய வழிகாட்டியில் வலியுறுத்து!

Saturday, August 21st, 2021

புதிய வழிகாட்டல்களின்படி, வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும்வரை, அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக தீர்மானிக்கப்பட்ட ஹோட்டல் அல்லது இடத்தில் தங்க வேண்டியது அவசியம்.

அங்கு முழுமையாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் பரிசோதனை முடிவில் கொரோனா தொற்றாளர் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை என புதிய வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றுக் கொள்ளாத ஒருவர், பரிசோதனை முடிவில் கொரோனா தொற்றாளர் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டாலும் கூட, அவர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்களில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: