செலவுகளை குறையுங்கள் – அனைத்து அமைச்சுகளுக்கும் ஜனாதிபதி செயலாளர் அறிவுறுத்து!

Sunday, August 14th, 2022

அரசாங்க செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான திறைசேரியின் சுற்றறிக்கையை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் காரணமாக, பொதுச் செலவினங்களை முடியுமான வரை குறைக்குமாறு அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள், மின்சாரம் மற்றும் தொடர்பாடல் வசதிகள் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டிடங்களை வாடகைக்கு எடுப்பது அல்லது புதிய குத்தகை அல்லது குத்தகைக்கு செல்வதை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேநேரம் வாகனங்களுக்கான தற்போதைய ஒப்பந்தங்களை நீடிப்பதற்கு முன்னர் திறைசேரியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிந்தவரை காகிதப் பயன்பாட்டைக் குறைத்து, அதற்குப் பதிலாக தொழினுட்ப தொடர்பு தளங்களுக்கு மாறுமாறு அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: